ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை சுவரில் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குமாரின் மனைவி தனது குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் தலையில் அடிபட்டதால் குழந்தை உயிரிழந்தது உறுதியானது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.