நேபாள நாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்கு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திரிசூலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் மதன்-ஆர்ஷித் நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

அந்த சமயத்தில் அவ்வழியாக 2 பேருந்துகள் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென நிலச்சரிவினால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. அந்த பேருந்துகளின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. மேலும் அந்த இரு பேருந்துகளிலும் மொத்தம் 63 பயணிகள் இருந்த நிலையில் அவர்களின் கதி என்னவென்று இதுவரை தெரிய வராத நிலையில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.