![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/07/1200-675-21842094-thumbnail-16x9-bus.jpg)
தமிழகத்தில் TNSTC ஆன்லைன் முன்பதிவு மூலமாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து பயணிப்பவர்களில் கணினி குலுக்கள் மூலம் முதல் 13 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
முதல் மூன்று பயணிகளுக்கு பத்தாயிரம் ரூபாய், மீதமுள்ள 10 பயணிகளுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும். ஜூன் மாதம் முதல் 13 நபர்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த சில மாதங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் பயணிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரசின் இந்த திட்டத்திற்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.