கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் 20 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். அதே கல்லூரியில் நவீன் என்பவரும் படித்து வருகிறார்.

இந்த நிலையில் நவீன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் இளம்பெண் தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இதுகுறித்து இளம்பெண் நவீனிடம் கூறி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு நவீன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் நவீனின் பெற்றோர் அவருக்கு திருமணம் நடத்த வேறு ஒரு இடத்தில் பெண் பார்த்து வந்தனர்.

இதுகுறித்து அறிந்த பாதிக்கப்பட்ட இளம்பெண் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நவீனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.