விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், ASP பல்வீர் சிங்கின் இடைநீக்கத்தை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. இந்த வழக்கில் பல்வீர் சிங் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், கடந்த மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது இடைநீக்க உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பிற்கு ஏற்ப அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.