கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பிளஸ் டூ மாணவியும் அதே பகுதியை சேர்ந்த மாணவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாணவி காணாமல் போனதால் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் பல இடங்களில் தேடி மாணவியை கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில் மாயமான மாணவி பள்ளி காதலனுடன் சீருடை தாலி கட்டிக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாணவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.