ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டு ஒரு வருடம் முடிவதற்குள் ஆம்ஸ்ட்ராங்கை 8 பேர் கொண்ட கும்பல் நேற்று சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளது. ஆகஸ்ட் மாதம்18 ஆம் தேதி ரவுடி ஆற்காடு சுரேஷ் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை அருகிகடந்த ல் வைத்து படுகாலை செய்யப்பட்டார்.

அந்த கொலையில் நேற்று கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது தொடர்பாக இரு தரப்புக்கு இடையே முன் விரோதம் நீடித்தது. இதனால் சபதம் எடுத்து ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.