
பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சரத் பவார் மற்றும் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டம் முடிந்த பிறகு சென்னை திரும்பிய ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, பாஜகவை வீழ்த்துவதை அனைத்து தலைவர்களும் ஒற்றை இலக்காக கொண்டுள்ளனர்.
பாஜக என்று சொல்வதால் ஏதோ ஒரு தனிப்பட்ட கட்சிக்கு எதிரான கூட்டமாக நேற்று நடந்தது என்று நினைக்க வேண்டாம். ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழை எளிய மக்கள் காக்கப்பட வேண்டும் என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக வேண்டும் என்று சாலை தெரிவித்துள்ளார்.