தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நான்கு மாத சான்றிதழ் படிப்புக்காக லண்டன் செல்ல உள்ளதால் அவர் தலைமை பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் 4 மாதங்கள் லண்டனில் தங்கி படித்தபடியே தலைவர் பணிகளை கவனிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 12 அரசியல் தலைவர்களை படிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அமைத்துள்ளது.

அதில் அண்ணாமலையும் ஒருவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் இரண்டாம் தேதி இதற்கான வகுப்புகள் தொடங்க உள்ளதால் அண்ணாமலை ஒரு வாரத்திற்கு முன்பு லண்டன் செல்ல உள்ளார். இதனால் அங்கிருந்து அரசியல் பணிகளை தொடர்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.