பருத்திவீரன் படத்தில் முத்தழகு என்ற கேரக்டர் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் கட்டி இழுத்தவர்தான் பிரியா மணி. இவர் திடீரென்று தெலுங்குக்கு போய் சில வருடங்களில் பிகினி  உடை அணிந்து ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார்.  படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு இந்த பாடலை படத்தின் வியாபாரத்திற்காக பயன்படுத்தினார்கள். இதனால் பிரியாமணி ரொம்பவே கோபப்பட்டதாகவும், அதன் பிறகு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து பேசி அதிகமாக சம்பளம் கொடுக்கப்பட்டது எனவும் செய்திகள் வெளியானது.

ஆனால் அதை அந்த படத்தின் தயாரிப்பாளர் TS ராவ் பிரியாமணியிடம் முதலில் கதை சொல்லும்போது இந்த காட்சி பற்றி எதுவுமே பேசவில்லை. 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்ததும் இயக்குனர் இது குறித்து பிரியாமணியிடம் பேசினார். பிரியாமணி 10 நிமிடம் எடுத்துக்கொண்டு  அவருடைய அம்மாவிடம் பேசிவிட்டு பின்பு ஓகே சொன்னார். பிரியாமணி பிகினி உடை அணிந்த பாடல் காட்சியை வைத்துதான் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. இதற்காக அவர் எக்ஸ்ட்ரா காசு எல்லாம் கேட்கவில்லை” என்று சொல்லியுள்ளார்.