
திருச்சி மாவட்டம் பெரியகுடந்துறை என்னும் பகுதியில் ஜெயந்தி(20) என்ற பெண் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் இவருடைய குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது. உடனடியாக ஜெயந்தியை ஏற்றிக்கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றனர்.
அப்போது திடீரென ஜெயந்திக்கு வலி அதிகமானது. எனவே ஆம்புலன்ஸை சாலை ஓரமாக நிறுத்தினர். ஆம்புலன்சில் இருந்த உதவியாளர் புனிதா, டிரைவர் பாலமுருகன் ஜெயந்திக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இதைத்தொடர்ந்து தாயும் குழந்தையும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தாயும் குழந்தையும் நலமுடன் இருக்கிறார்கள் என்று கூறினார்கள்.