இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா. இந்த நிறுவனத்தின் விமானங்களில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் செல்கிறார்கள். இந்நிலையில் தற்போது ஏர் இந்தியா விமானத்தில் தகுதி இல்லாத பயணிகளை ஏற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக அந்த நிறுவனத்திற்கு 90 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சிவில் விமான போக்குவரத்து கழகமான டிஜிசிஏ அறிவித்துள்ளது.

அதன்படி அந்த நிறுவனத்தின் விமான செயல் இயக்குனருக்கு 6 லட்ச ரூபாயும், விமான பயிற்சி இயக்குனருக்கு 3 லட்ச ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த நிறுவனத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 90 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அந்த நிறுவனத்திடம் விசாரணை நடத்தியதில் தகுதி இல்லாத பயணிகளை ஏற்றி சென்றது உறுதியானதை தொடர்ந்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.