
உத்தரப்பிரதேச மாநிலம் நோய்டா, செக்டர் 18 பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அட்டா மார்க்கெட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் வெப்பத்துடன் கூடிய பெரிய தீ விபத்து ஏற்பட்டது. ஆரம்ப தகவல்களின் படி, கடந்த 10–15 நிமிடங்களாக தீ எரிந்துவருவதால் பலர் அந்த இடத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டதும், சிலர் பாதுகாப்பாக உள்ளே இருந்து வெளியேற முடியாத நிலையில் கூரைக்கு ஏறி தப்ப முயன்றதோடு, அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன. உயிர் தப்பிக்க 4-வது மாடியில் இருந்து குதித்த 2 பேர் காயம் அடைந்தனர்.
#WATCH | UP | Fire breaks out in a commercial building housing offices in Noida’s Sector 18; Fire Dept and Police present
Joint CP Shiv Hari Meena says, “We got information about a fire incident in the Krishna Plaza building. Many people have been rescued from the building.… pic.twitter.com/hJMVKgVWtP
— ANI (@ANI) April 1, 2025
தற்போது, சம்பவ இடத்தில் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பெரிய அளவில் கருப்பு புகை வெளியேறிய காட்சிகள் வைரலாகி, மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.
Please arrive quickly, there is a fire, people are trapped, the fire department has not yet arrived, it has been 10-15 minutes. Noida sector 18 market @Uppolice @noidapolice @ANI pic.twitter.com/CjZkAhXo5N
— Piyush Yadav 🇮🇳 (@yadavpiyush207) April 1, 2025
மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், தீயில் சிக்கியவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற முடிகிறது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்தில் ஏற்பட்ட சேதம் மற்றும் காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.