பிரபல தொழிலதிபர் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட் ஆகியோருக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத் மற்றும் வெளிநாடுகளில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் அம்பானி மகனின் திருமண அழைப்பிதழ் தற்போது இணையதளத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. அதாவது அது திருமண அழைப்பிதழா அல்லது கோவிலா என வியக்க வைக்கும் அளவுக்கு பிரம்மாண்டத்தின் உச்சமாக திருமண அழைப்பிதழ் இருக்கிறது.

அதாவது அந்த திருமண அழைப்பிதழை முதலில் திறந்தவுடன் விஷ்ணு நாமம் படிக்கிறது. அதற்குள் வெள்ளி தேரில் தங்க விக்கிரகத்திலான சாமி சிலை இருக்கிறது. அதில் பெருமாள் மற்றும் லட்சுமி போன்ற கடவுள்களின் உருவங்கள் அமைந்துள்ளது. அதன் பிறகு ஒரு திருமண பெட்டியை பிறக்கும்போது அதில் அவர்களின் திருமண குறிப்பு மற்றும் 2 சாமி பெட்டிகள் இருக்கிறது. அந்தப் பெட்டிகளை திறந்து பார்க்கும் போது விஷ்ணு நாமம் படிக்கிறது. இதேபோன்று மற்றொரு அழைப்பிதழில் கடவுளின் விக்கிரகங்கள் ‌ மிகச் சிறப்பாக அமைந்துள்ளதோடு அவர்களின் திருமண குறிப்புகளும் அமைந்துள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.