இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்கும் நிலையில் அவருடைய பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைந்துள்ளது. நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்றுள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ராகுல் டிராவிட் இருக்கும் நிலையில் அவருடைய தலைமையில் 2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை ஆகிய போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவியது. இருப்பினும் தற்போது உலக கோப்பையை இந்திய அணி வென்றுள்ளதால் சிறப்பான போட்டியுடன் ராகுல் டிராவிட் விடை பெற்றுள்ளார். மேலும் அவரை இந்திய அணியின் வீரர்கள் தலைக்கு மேல் தூக்கி கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.