விண்கல் ஒன்று பூமியை தாக்க 72% வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விண்கல் ஆனது பூமியில் ஏற்படுத்த இருக்கும் பாதிப்பை தடுக்க நாம் இன்னும் தயாராகவில்லை  என்றும் நாசா பரபரப்பு தகவலை கூறியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மாரிலாந்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு கூடத்தில் நடத்தப்பட்ட கிரகங்களின் பாதுகாப்பு குறித்த சோதனையில் பூமிக்கு விண்வெளியில் இருந்து ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து ஆராயப்பட்டது.

அப்பொழுது இந்த சோதனை தொடர்பான அறிக்கை கடந்த ஜூன் 20 ஆம் தேதி நாசா வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பூமிக்கு வரும் காலங்களில் விண்கற்களால் அதிக ஆபத்து இருந்து வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்பதற்கான முக்கியத்துவம் இந்த ஆராய்ச்சியில் கொடுக்கப்பட்டது . இந்த ஆய்வில் இதுவரை மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடங்களில் துல்லியமாக அதாவது 2038 ஆம் வருடம் ஜூலை 12ஆம் தேதி பூமியை தாக்கி அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.