மத்திய அரசானது பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது கேட்டரிங் தொழில் தொடங்கும் பெண்களுக்காக அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசானது செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக தொழில் தொடங்கும் பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பணத்தின்  மூலம் சமையல் உபகரணங்கள், ஃப்ரிட்ஜ், கேஸ் இணைப்பு, டைனிங் டேபிள் போன்றவற்றை வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும், இந்த தொகையை 3 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு SBI கிளையைத் தொடர்பு கொண்டு இந்தக் கடனைப் பெறலாம்.