
இளம்பெண் ஒருவரின் வயிற்றில் ஆபரேஷன் செய்தபோது துணி வைத்து தைத்தது மருத்துவமனைக்கு 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016 வருடம் திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வயிறு வலி காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது மருத்துவர் அவருடைய வயிற்றில் நீர்க்கட்டி இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்து அவருக்கு தொடர்ந்து வயிறு வலி ஏற்பட்டுள்ளது.
பின்னர் வேறு மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருடைய கருப்பை அகற்றப்பட்டதும் வயிற்றில் துணி வைத்து இருப்பதும் தெரிய வந்தது. இதனைடுயத்து அந்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த பெண் மதுரையில் உள்ள மாநில நுகர்வோர் குற்றவியல் ஆணையத்தின் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த குறைதேர் ஆணையமானது தவறாக அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைக்கு 25 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.