
பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளின் திருமணம், மேற்ப்படிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக தற்போது இருந்து குழந்தைகளின் பெயரில் பணத்தை சேமிக்க விரும்புகிறார்கள். இவ்வாறு குழந்தையின் பெயரில் பணத்தை சேமிக்க வேண்டும் என்றால் அதற்கு என்று வங்கிகளில் சில விதிமுறைகள் இருக்கிறது. அதாவது பத்து வயதுக்குட்பட்ட குழந்தையின் பெயரில் சேமிப்பை தொடங்க பெற்றோர்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்களோ அந்த வங்கியில் குழந்தைக்கு வங்கி கணக்கு தொடங்க வேண்டும்.
மேலும் கட்டாயமாக KYC விவரங்களை பூர்த்தி செய்து இருக்க வேண்டும். மைனர் குழந்தைகளாக இருக்கும் வரைக்கும் சேமிப்பு கணக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர் கண்காணிப்பில் இருக்கும். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை சேமிப்பு கணக்கு நிர்வகிக்க வங்கிகள் அனுமதிக்கின்றன.