
திருமணம் ஆகி உங்களுக்கு பெண் குழந்தை இருந்தால் இந்த திட்டமானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முற்றிலும் ஆபத்து இல்லாத திட்டம். இந்த திட்டத்தின் பெயரில் பெயர் சுகன்யா சம்ரிதி யோஜனா. அதாவது செல்வமகள் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் உங்களுடைய பெண் குழந்தையின் பெயரில் கணக்கு தொடங்கி சேமிக்கலாம். பெண்ணுக்கு 21 வயது ஆன பிறகு முதிர்வு தொகை கிடைக்கும்.
இந்த திட்டத்தில் எட்டு சதவீதம் வட்டி கிடைக்கிறது. இதில் காலாண்டு அடிப்படையில் வட்டி செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வட்டியை அரசு உயர்த்தியதால் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் முதலீட்டாளர்கள் 18 லட்சம் மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும். 21 வருடங்களுக்கு பிறகு வட்டியாக மட்டும் 33,03,707 லட்சம் கிடைக்கும்.