
இந்திய மின்னணு நிறுவனமான BPL குழுமத்தின் தலைவர் கோபாலன் நம்பியார். இவர் கடந்து சில வருடங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் இவருக்கு தற்போது 94 வயதாகிறது. இந்நிலையில் நேற்று அதாவது தீபாவளி பண்டிகையில் அவர் உடல் நலக்குறைவினால் உயிரிழந்துவிட்டார்.
இவர் முன்னாள் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகரின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவருடைய மறைவுக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இவருடைய இனங்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.