திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள வலங்கப் புலி சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர மகேந்திரன். இவரது மனைவி மகேஷ் (30). இவர்களுக்கு சுதர்சன் (6) மற்றும் முகிலன் (2) மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த மகேஷ் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு, தானும் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இது குறித்து அறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக மூவரையும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், நிலைமையின் தீவிரத்தை அறிந்த மருத்துவர்கள், அவர்களை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சம்பவம் தொடர்பாக சேர்ந்தமரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.