இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் பாரதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பேட் கேர்ள். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகிய நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை சான்று வழங்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அஞ்சலி, ரம்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி இந்த படத்தின் டீசர் வெளியானதிலிருந்து இந்த படம் பலவிதமான சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

இந்த படம் ஒரு டீனேஜ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள், அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள்? அனுபவிக்கிறாள்  என்பதை குறித்து இந்த படம் பேசியுள்ளது. இந்த நிலையில் சங்கரன்கோவிலை சேர்ந்த 3 பேர் பேட் கேர்ள் பட டீசர் குழந்தைகளுக்கு எதிராகவும் சிறுமிகளை ஆபாசமாக காட்டுவதாகவும் கூறி OTT பக்கத்தில்  இருந்து நீக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தனபால் மத்திய அரசு மற்றும் கூகுள் இந்தியா அதிகாரி டீசர் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவளித்து ஒரு வாரத்திற்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.