தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுர அலங்காரத்தை வைத்ததற்காக தற்போது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் ககண்டனம்  தெரிவித்து ஒரு எக்ஸ் தள பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,

மறைந்த திரு. கருணாநிதி அவர்களின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிப்புதூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் திமுக அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது. “பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி” என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு இதுவரைக் கேவலப்படுத்தியது போதாதா?
சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா? அதுவும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் திரு. சேகர்பாபு அவர்கள் இவ்வாறு இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். மேலும், அந்த பிரச்சினைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் எ =ன்று பதிவிட்டுள்ளார்.