தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றது. இந்த மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வுக்கு பிறகு ஜனவரி மாதம் முதல் பொதுத் தேர்வுக்கு முன்னர் வரை மூன்று திருப்புதல் தேர்வுகள் முழு பாடத்திட்டங்களுக்கு நடத்தப்படும் நிலையில் மாணவர்கள் இதன் மூலம் தேர்வுக்கு குறித்த அச்சம் நீங்கி மிகவும் தன்னம்பிக்கையுடன் பொதுத்தேர்வை எதிர் கொள்ள ஏதுவாக இருக்கிறது. மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வை எழுதி முடிப்பதற்கான பயிற்சியும் வழங்கப்படும் நிலையில் தேனி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மாவட்டத்தின் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தனியார் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்பு தேர்வு அட்டவணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளை முறைப்படி நடத்த வேண்டும் எனவும் அட்டவணைப்படி ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் ஜனவரி 24ஆம் தேதி வரை முதல் திருப்புதல் தேர்வுகள் பிற்பகல் 1.30 மணி முதல் 4.45 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது