இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ஆச்சரியமூட்டும் விதமாக இருக்கிறது. அதன் பிறகு காதல் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. அதன்படி கிறிஸ்டியன் என்ற ஒரு வாலிபர் பொம்மையை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த பொம்மைக்கு நாடாலியா என்று அவர் பெயர் வைத்துள்ளார். இவர்களுக்கு தற்போது 3 குழந்தைகளும் இருக்கிறார்களாம். இந்த 3 குழந்தைகளும் பொம்மைகள் தான்.

அதாவது அந்த நபர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் ‌ அவர் கிறிஸ்டியனை ஏமாற்றிவிட்டு வேறொரு நபருடன் பழகியுள்ளார். இந்த காதல் தோல்வியிலிருந்து அவரால் மீண்டு வர முடியாத நிலையில் மறுபடியும் வேறொரு பெண்ணை காதலித்தாலோ அல்லது திருமணம் செய்தாலோ தன்னை ஏமாற்றி விடுவார் என்ற பயத்தில் பொம்மையை காதலித்து கரம் பிடித்துள்ளார். பொம்மை யாரையும் ஏமாற்றாது  என்பதோடு எப்போதும் நம்முடனே இருக்கும் என்ற நோக்கத்தில் அவர் இப்படி செய்துள்ளார். அவர் எங்கு சென்றாலும் பொம்மையை தன் பின்னால் கட்டி வைத்துள்ளதோடு ‌ அதிகமாக பொம்மையை காதலித்து வருகிறாராம். மேலும் அவர் பொம்மையுடன் பைக்கில் சென்ற ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.