
2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பு களுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி ஜூன் 6-ம் தேதி வரை நடைபெற்றது. அதில் 2.49 லட்சம் மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்துள்ள நிலையில் 2.06 லட்சம் மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்த சூழலில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்க ஜூன் 11ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.