நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கையில் சென்னை பெருநகர மாநகராட்சிக்கான அறிவிப்புகளின் பட்டியல் இதோ…

▪️ நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ரூ.52 கோடி மதிப்பீட்டில் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

▪️ ஏரிகள், குளங்களை மறுசீரமைத்து நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க ரூ.120 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

▪️ புதிய பள்ளிக் கட்டடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் ரூ.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

▪️ வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தின் கீழ், பேருந்து செல்லும் சாலைகளில் 200 கி.மீ நீளத்திற்கு ரூ.200 கோடி மதிப்பீட்டில் நடைபாதைகள் அமைக்கப்படும்.

▪️ ரூ.95 கோடி மதிப்பீட்டில் ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால்வாய்களின் தடுப்புச் சுவரை உயர்த்தவும், குப்பைகள் கொட்ட முடியாத அளவுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கவும் நடவடிக்கை.

▪️ ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும்.

▪️ ரூ.60 கோடி மதிப்பீட்டில் கள்ளிக்குப்பம், வில்லிவாக்கம் மற்றும் சைதாப்பேட்டை இறைச்சிக் கூடங்கள் மேம்படுத்தப்படும்.

▪️ பொது மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் நவீன வசதிகள் உயர்தர வணிக வளாகங்கள் கட்டப்படும்.

▪️ ரூ.60 கோடி மதிப்பீட்டில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.

▪️ ரூ.45 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.