
தமிழ் சினிமாவில் ஆகஸ்ட் 15 ம் தேதி 4 தமிழ் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது. அதன்படி
இயக்குனர் பா. ரஞ்சித் நடிகர் விக்ரம் வைத்து “தங்கலான்” என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பிரம்மாண்டமான பட்ஜெட்டில் கே.ஈ.ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் வெளியாகவுள்ளது. தற்போது இந்த திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

அதன்பிறகு பிரசாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் “அந்தகன்” திரைப்படம் இயக்குனர் தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்தப் படம் கிரைம் திரில்லர் போன்ற படமாகும். இந்த படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி யோகி பாபு, போன்ற முக்கியமான நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இதனையடுத்து இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் “ரகு தாத்தா” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரவீந்திர விஜய், எம்.எஸ்.பாஸ்கர் போன்ற நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் அருள்நிதி நடித்துள்ள “டிமான்டி காலனி 2” என்ற படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் பாடத்தின் டிரைலர் காட்சிகள் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
