சென்னை மாவட்டம் அண்ணா சாலையில் ஒரு வாலிபர் மது போதையில் காரை ஓட்டி சென்று தடுப்பு சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதனையடுத்து காரை ரிவர்ஸ் எடுக்க முயன்ற போது இரண்டாம் நிலை காவலரான கணேசன் என்பவர் மீது கார் மோதியது.

இதனால் காயமடைந்த கணேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவரான மணிகண்டன்(21) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.