
சேலம் மாவட்டம் எடப்பாடி ஆலச்சம்பாளையம் பூசாரி வட்டம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஷங்கர் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பூலாம்பட்டி பிரதான சாலையில் கள்ளுக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக சென்றுள்ளார்.
அங்கு மது அருந்திய நிலையில் போதை தலைக்கேறியதால் கள்ளுக்கடை பகுதியில் உள்ள பிரதான சாலையின் நடுவில் படுத்து இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி ஒன்று சாலையில் படுத்திருந்த ஷங்கரின் தலையின் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்துக்கு குறித்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் தற்போது அது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.