
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிய கோட்டையில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜசுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ், ஆறாம் வகுப்பு படிக்கும் கிஷோர் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிஷோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
முதலில் காய்ச்சல் வந்து அதன் பிறகு வலிப்பு நோய் ஏற்பட்டு கிஷோரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு மூளை சாவு ஏற்பட்டு சிறுவன் பரிதாபமாக இறந்துவிட்டான். மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். நேற்று அறுவை சிகிச்சை மூலம் சிறுவனின் இதயம், நுரையீரல் உள்ளிட்ட ஆறு உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. மகன் இறந்த போதும் பெற்றோர் உடல் உறுப்பு தானம் செய்த சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.