
தனது மகன், மருமகள் மீதான புகார் குறித்து பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். அதில் என் மகனுக்கு திருமணமாகி விட்டது. அவர்கள் 7 வருடங்களாக திருவான்மியூரில் தனியாக வசித்து வருகிறார்கள். அங்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
என் மருமகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்கள் அதை எடுப்பார்கள் என அவர் தெரிவித்தார். திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மகள் தன்னை கொடுமைப்படுத்தியதாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.