தெலுங்கானா மாநிலத்தில் மொக்கம் அஜநேயலு-பாக்யலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு வாலிபரோடு பழகி வந்த நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் பாக்கியலட்சுமிக்கு தெரிய வரவே அவர் தன் மகளின் காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளார். ஆனால் தந்தை காதலை ஒப்புக்கொள்ளவில்லை. இது தொடர்பாக தன்னுடைய மகள் மற்றும் மனைவியை அவர் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய மகளின் காதலுக்கு கணவன் தடையாக இருப்பதால் பாக்கியலட்சுமி கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சைம்மாவிடம் பாக்யலட்சுமி கூறியுள்ளார். அதன் பிறகு தன் கணவனை கொல்ல அவர் 3 ஆடுகளை கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர்கள் ஆட்டுக் கொட்டகைக்கு திட்டமிட்டு அவரை வரவழைத்து தூங்க வைத்தனர். பின்னர் கண்களில் மிளகாய் பொடியை தூவி கழுத்தை நெரித்து  அவரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து நைசாக நழுவி சென்றுவிட்டனர். இந்த கொலையில் வேறு சிலரும் பாக்கியலட்சுமிக்கு உதவியுள்ளனர். மேலும் இதுகுறித்த தகவலின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாக்கியலட்சுமி உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.