
கேரளாவில் வசிக்கும் மாணவி கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் தேர்வு எழுத சென்ற மாணவியின் செயல்களில் சந்தேகம் இருந்ததால் பள்ளி ஆசிரியர் அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தார். அப்போது கூலி வேலை பார்க்கும் தனது தந்தை தனக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக சிறுமி கூறியுள்ளார் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியை குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் குழந்தைகள் நல குழுவினர் சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதாவது மாணவிக்கு ஒன்றரை வயது இருக்கும்போதே அவரது தாய் இறந்து விட்டார். அதன் பிறகு கூலி தொழிலாளி வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த மாணவிக்கு ஐந்து வயது இருக்கும்போதே அவரது தந்தை பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளாக இந்த கொடுமையை சகித்துக் கொண்டு மாணவி இருந்துள்ளார். இதனையடுத்து மாணவியின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்த வழக்கினை விசாரித்து திருவனந்தபுரம் நீதிமன்றம் கூலி தொழிலாளிக்கு சாகும் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் அவருக்கு 1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது .