![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/06/1000-1694760770-down-1694948512-1695370309.jpg)
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவர்கள் என பலரும் விண்ணப்பிக்க தயாராக உள்ளனர்.
அதனைப் போலவே புதிய ரேஷன் கார்டு அடுத்த வாரம் முதல் வழங்கப்பட உள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்கலாம். தற்போது தேர்தல் நடத்தை விதி வாபஸ் பெறப்பட்டதால் ஒரு சில நாட்களில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு தகுதியான நபர்களுக்கு ஜூலை முதல் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிகிறது.