உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பிரஜ் நரேன் நிஷாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். இவருடைய சகோதரர் தேஜ் நரேன். இவர்கள் இருவரும் சேர்ந்து மருந்தகம் இழங்கலை படிப்பு படித்து வரும் ஒரு சிறுவனை கடத்தியுள்ளனர். இந்த சிறுவனுக்கு 17 வயது ஆகிறது. இந்த சிறுவனுடன் பிரஜ் நரேன் நிஷாத்தின் மகள் படித்து வருகிறார். இந்நிலையில் சிறுவனும் அந்த சிறுமியும் சேர்ந்து ஒரு கடையில் ஒன்றாக ஜூஸ் குடித்துள்ளனர்.

இதனை அந்த சிறுமியின் தந்தை பார்த்த நிலையில் தன்னுடைய சகோதரர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சிறுவனை கடத்தி அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். அதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். அந்த சிறுவனை காவல்துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர். அதேசமயம் சிறுவன் அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கறிஞர்களின் கடும் அழுத்தம் காரணமாகவே சிறுவன் மீது அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..