
உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கியது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பக்தர்களுக்காக வாகன நிறுத்த வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவில் 65 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடியுள்ளனர். பலர் தங்களது குடும்பங்களை விட்டு பிரிந்த சோக நிகழ்வும் நடைபெற்றது.
ஆனால் முதல் மந்திரி யோகி தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சியால் 54, 354 பேர் குடும்பத்துடன் மீண்டும் இணைந்தனர். கும்பமேளா பகுதியில் 10 இடங்களில் டிஜிட்டல் கோயா பயா கேந்திரா மையம் அமைக்கப்பட்டது. அந்த மையம் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முகம் கண்டறியும் சாதனங்கள், பன்மொழி ஆதரவு அளித்தவற்றின் உதவியுடன் செயல்பட்டது. அரசின் தீவிர முயற்சி மற்றும் என்.ஜி.ஓ அமைப்பினர் செயல்பாடுகளால் 50000 பக்தர்கள் மீண்டும் குடும்பத்துடன் ஒன்று இணைந்த மகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது.