தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இன்று முதல் வருகிற 31ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதன்படி நெல்லை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, தென்காசி, திருப்பூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.