
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் 4 மணிக்குள் 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி திருப்பூர், கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, சேலம், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இன்று காலை முதல் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.