தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதோடு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. அதோடு இன்று வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மதியம் ஒரு மணி வரை தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், தேனி, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், கரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.