தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் ஜூலை 27ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் சென்னையை  பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.