
தமிழகத்தில் தற்போது ஸ்கரப் டைபஸ் (Scrub Typhus) என்ற தொற்று நோய் அதிகரித்து வருகிறது. இந்த நோய் ரிக்கட்சியா என்ற பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள் மற்றும் பூச்சிகள் கடிப்பதால் ஏற்படுகிறது. இந்த நோயின் அறிகுறிகளாக உடல் தடிப்புகள், காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு போன்றவைகள் இருக்கிறது. இந்த நோய் தமிழகத்தில் தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் பரவுகிறது.
அதேபோன்று கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் அதிக அளவில் பரவுகிறது. இந்த நோயினால் விவசாயிகள், வனப்பகுதியில் வசிப்பவர்கள், புதர் மண்டிய பகுதிகளில் இருப்பவர்கள் பாதிக்கப்படலாம். இந்த நோய்க்கு மருத்துவர்கள் பரிந்துரையின் படி அசித்ரோமைசின் மற்றும் டாக்ஸி சைக்கிள் மருந்துகள் பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும் இந்த தகவலை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள நிலையில் நோயின் அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவர்கள் அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்