நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள்  செயல்பட்டு வருகிறது. அன்றாடம் பொதுமக்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக வங்கிகளுக்கு செல்கிறார்கள். தினசரி வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் என்பது அதிகமாக தான் இருக்கும். இப்படி வங்கி சேவைகள் என்பது அவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில் விடுமுறை தினத்தில் வாடிக்கையாளர்கள் சற்று சிரமப்படுகிறார்கள். இந்நிலையில்  டிசம்பர் மாதத்தில் மட்டும் பொதுத்துறை வங்கிகளுக்கு கிட்டத்தட்ட 8 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படிடிசம்பர் 1 ஆம் தேதி இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை.

அதன் பிறகு டிசம்பர் 8-ம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை. இதே போன்று டிசம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை. இரண்டாவது சனிக்கிழமை என்பதால் விடுமுறை. இதைத்தொடர்ந்து டிசம்பர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை. அதன் பிறகு டிசம்பர் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை. இதைத்தொடர்ந்து டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு பொது விடுமுறை. இதைத்தொடர்ந்து டிசம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் விடுமுறை. மேலும் டிசம்பர் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை. ஆக மொத்தம் இந்த மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை வந்துள்ளதால் பொதுமக்கள் விடுமுறைகளை முன்கூட்டியே கணக்கிட்டு திட்டமிட்டு தங்கள் வங்கி பணிகளை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.