தமிழகத்தில் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அதனை முன்னிட்டு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான டோக்கன் ஜனவரி 3ஆம் தேதி முதல் வினியோகம் செய்யப்படும். இந்த பொங்கல் பரிசு தொகை 2.21 கோடி பேருக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைத் தமிழர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

இந்த முறை ரூபாய் ஆயிரம் ரொக்க பணம் மட்டும் வழங்கப்பட மாட்டாது. இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும் என்று தற்போது அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பொது மக்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏதுவாக ஜனவரி 3 மற்றும் ஜனவரி 10 ஆகிய தினங்களில் ரேஷன் கடைகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 15 மற்றும் பிப்ரவரி 22 ஆகிய தேதிகளில் விடுமுறை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.