மதுரை மாவட்டம் நாச்சிகுளம் சரவணா நகர் பகுதியில் ஆண்டி சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரட்டையர்களான ஜெயசூர்யா (23) மற்றும் சுபாஷ் (23) என்ற இரட்டை மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் பட்டதாரிகள். இவர்கள் மஞ்சு விரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுகளை வளர்த்து அதற்கு உரிய பயிற்சி வழங்கி வந்துள்ளனர். இவர்கள் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு ஆகிய போட்டிகளில் தங்களுடைய நண்பர்களான அஜய், நவீன், ராஜேஷ் ஆகியோருடன் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்கள் வழக்கமாக தங்களுடைய மாடுகளை முதலில் அவிழ்த்து விடும் நிலையில், கடந்த 12 ஆம் தேதி ஒரு கோவில் திருவிழாவில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் தங்கள் மாடுகளை முதலில் அவிழ்த்து விட்டுள்ளனர். அந்த மாடுகளை மதன் மற்றும் அவருடைய நண்பர்கள் பிடித்த நிலையில் அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு மதன்  தன்னுடைய நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து சகோதரர்கள் இருவரையும் அரிவாளால் சர மாரியாக வெட்டி படுகொலை செய்த நிலையில் மற்ற மூவரையும் கொலை செய்ய முயன்றனர். அப்போது அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை வலை வீசி தேடி வருகிறார்கள்.