மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக சமூக நீதி அமைச்சராக இருப்பவர் நாராயண் சிங் குஷ்வா. இவர் போபாலில் நடந்த ஒரு போதை ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, உங்களுடைய மகன்கள் மற்றும் கணவன்மார்கள் மது குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு நான் ஒரு யோசனை சொல்கிறேன்.

அதாவது அவர்களை வீட்டுக்குள்ளேயே அமர்ந்து குடிக்க சொல்லுங்கள். அப்போது தன் அம்மா, மனைவி மற்றும் குழந்தைகள் கண் முன்பு குடிப்பதற்கு வெட்கப்பட்ட அவர்கள் மது குடிக்கும் பழக்கத்தை குறைத்து விடுவார்கள். அதோடு நீங்கள் குடிப்பதை பார்த்து உங்கள் பிள்ளைகளும் எதிர்காலத்திலும் குடிப்பார்கள் என்று அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள். பின்னர் அவர்கள் மது குடிக்கும் பழக்கத்தை தானாகவே நிறுத்தி விடுவார்கள். மேலும் இந்த யோசனை நிச்சயம் சாத்தியமாகும் என்று கூறியுள்ளார்.