
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெண்கலபொட்டல் பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் ரயில்வே கார்டாக வேலை பார்க்கிறார். இவருக்கு புதுச்சேரியைச் சேர்ந்த 29 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் திருவனந்தபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பார்மசிஸ்டாக பணிபுரிகிறார். இந்த நிலையில் சுபாஷ் தனது குடும்பத்தினரை வெளியூருக்கு அனுப்பி விட்டு பார்ட்டி வைப்பதாக கூறி இளம் பெண்ணை திருநெல்வேலிக்கு வரவழைத்துள்ளார்.
பிரபல பாரில் வைத்து இருவரும் மது குடித்துள்ளனர். போதை தலைக்கேறி அந்த பெண் மயக்கத்தில் இருந்தபோது சுபாஷ் அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் சுபாஷின் நண்பரான முருகேசன் என்பவரையும் வரவழைத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். முருகேசன் அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்க்கிறார். போதை தெளித்து எழுந்த இளம் பெண் அவர்களிடம் இருந்து தப்பித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுபாஷையும் முருகேசனையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.