மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகல விலை படியை நான்கு சதவீதம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் அகல விலைப்படி 42 சதவீதத்தை எட்டியுள்ளது.

அகல விலைப்படி உயர்த்தும் முடிவால் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.26 லட்சம் மத்திய ஓய்வூதியர்களும் பயனடைவார்கள். இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் 12,815 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இதனிடையே எட்டாவது ஊதிய குழுவை பரிசீலிக்க வேண்டும் எனவும் தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.