மனதின் குரல் நிகழ்ச்சியில்  மக்கள் மத்தியில் உரையாற்றுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் ஞாயிறுதோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே மனதின் குரல்  என்ற நிகழ்ச்சியின் மூலமாக பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடுவார். இந்நிலையில் பிரதமர் மோடியின் 100வது ‘மனதின் குரல்’ நிகழ்வை தமிழகத்தில் சட்டப்பேரவை தொகுதிக்கு 100 இடங்கள் வீதம் ஒலிபரப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை, உலகில் எந்த தலைவரும் மக்களுடன் வானொலியில் அதிகம் பேசியது இல்லை. 99 முறை பேசியவர் மோடி மட்டுமே. அதனால், 234 தொகுதிகளில் தொகுதிக்கு 100 பூத்களில் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.